அமீ ச1 த்1வாம் த்4ருத1ராஷ்ட்ரஸ்ய பு1த்1ரா: ஸர்வே ஸஹைவாவனிபா1லஸங்கை4: |

பீ4ஷ்மோ த்3ரோண:ஸூத1பு1த்1ரஸ்த1தா2ஸௌ ஸஹாஸ்மதீ3யைரபி1 யோத4முக்2யை: ||26||
வக்1த்1ராணி தே1 த்1வரமாணா விஶன்தி11ம்ஷ்ட்ராக1ராலானி ப4யானகா1னி |

கே1சி1த்3விலக்3னா த3ஶனான்த1ரேஷு ஸன்த்3ருஶ்யன்தே1 சூ1ர்ணிதை1ருத்11மாங்கை3: ||27||

அமீ--—இவர்கள்; ச--—மற்றும்; த்வாம்--—உங்களை;த்ருதராஷ்ட்ரஸ்ய—--த்ருதராஷ்டிரனின்; புத்ராஹா—----குமாரர்கள்; ஸர்வே---அனைத்து; ஸஹ--—உடன்; ஏவ--—கூட; அவனி-பால—--அவர்களின் கூட்டணி அரசர்கள்; ஸங்கைஹி—--சபை; பீஷ்மஹ--—பீஷ்மர்; துரோணஹ---- துரோணாச்சாரியர்; ஸூத-புத்ரஹ----கர்ணன்; ததா—--மேலும்; அஸௌ--—இது; ஸஹ—--உடன்; அஸ்மதியைஹி--—நம் பக்கத்திலிருந்து; அபி—--மேலும்;யோத-முக்யைஹி---ஸேனாதிபதிகள்;வக்த்ராணி---வாய்களில்;தே—--உங்கள்; த்வரமானாஹா-----விரைவதை; விஶந்தி—--நுழைவதை; தம்ஷ்ட்ரா--—பற்களால்;கராலானி---—பயங்கரமான;பயாநகானி—---பயமுறுத்தும்; கேசித்--—சிலர்; விலக்னாஹா--—சிக்கி; தஶன---அந்தரேஷு—---பற்களுக்கு இடையில்; ஸன்த்ருஶ்யன்தே—--தெரிகின்றது; சூர்ணிதைஹி----:நசுக்கப்பட்ட; உத்தம---அங்கைஹி--—தலைகள்

అనువాదం

BG 11.26-27: பீஷ்மர், துரோணாச்சாரியர், கர்ணன், மற்றும் அவர்கள் பக்கம் உள்ள தளபதிகள் உட்பட, திருதராஷ்டிரனின் அனைத்து மகன்களும், அவர்களின் நட்பு அரசர்களும், உங்களது பயமுறுத்தும் வாயில் தலைகுனிந்து விரைவதை நான் காண்கிறேன். உங்களது பயங்கரமான பற்களுக்கு இடையே தலை நசுக்கப்பட்ட சிலரை நான் காண்கிறேன்.

వ్యాఖ్యానం

அர்ஜுனன் குறிப்பிடும் கடவுளின் பற்கள் எவை? முந்தைய வசனத்திலும் அவற்றைக் குறிப்பிட்டுள்ளார். நம் உணவை அரைக்க நம் பற்களைப் பயன்படுத்துகிறோம். கடவுளின் பற்கள் அவரது அழிவு சக்திகள், அவை காலப்போக்கில் அனைவரையும் மரணத்திற்கு அரைக்கும். அமெரிக்க கவிஞர், எச்.டபிள்யூ. லாங்ஃபெலோ எழுதினார்:

கடவுளின் ஆலைகள் மெதுவாக அரைத்தாலும்,

அவை மிகவும் சிறியதாக அரைக்கின்றன;

பொறுமையுடன் அவர் காத்திருந்தாலும்,

துல்லியத்துடன் அவர் அனைத்தையும் அரைக்கிறார்.

பெரிய கௌரவ தளபதிகளான பீஷ்மர், துரோணாச்சாரியார் மற்றும் கர்ணன் மற்றும் பல பாண்டவ தளபதிகளும் இறைவனின் வாயில் தலைகீழாக தலைகுனிந்து இறைவனின் பற்களுக்கு நடுவே அரைப்ப்படுவதற்கு விரைவதை அர்ஜுனன் பார்க்கிறார். அவர் கடவுளின் ப்ரபஞ்ச வடிவத்தில் உடனடி எதிர்காலத்தைப் பார்க்கிறார். கடவுள் காலத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர் என்பதால், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை நிகழ்காலத்தில் அவருக்குள் தெரியும்.

கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் மூதாதையர் பீஷ்மர், சாந்தனு மற்றும் கங்கையின் மகன். தனது தந்தையின் மறுமண விருப்பத்தை எளிதாக்க, பீஷ்மர் தனது அரியணை உரிமையைத் துறந்தார், மேலும் பிரம்மச்சரியத்தின் வாழ்நாள் சபதத்தையும் மேற்கொண்டார். இருப்பினும், பீஷ்மர் துரியோதனன் தீயவன் மற்றும் பாண்டவர்களின் உரிமையை அபகரித்துக் கொண்டு இருந்தான் என்று அறிந்த போதிலும் அவர்களை ஆதரித்தார். எனவே, அவர் நன்மைக்கு எதிரான தீமைக்கான போரில் இறக்க வேண்டியிருந்தது. ஸ்ரீமத் பாகவதம் பீஷ்மர் தனது வாழ்நாளின் முடிவில் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபொழுது இறைவனிடம் செய்த பிரார்த்தனையை விவரிக்கிறது:

ஸப1தி3 ஸகி2-வசோ2 நிஶம்ய மத்4யே

நிஜ-ப1ரையோர் ப1லயோ ரத2ம் நிவேஶ்ய

ஸ்தி22வதி2 பரா- ஸைனிகா1யுர் அ்க்ஷ்ணா

ஹ்ருத1வதி1 பா1ர்த2-ஸகே2 ரதி1ர் மமாஸ்து1 (1.9.35)

‘இரு சேனைகளின் நடுவே ரதத்தை ஓட்டிச் செல்லும் தன் நண்பனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அங்கே இருந்தபொழுது, ​​தன் பார்வையால் எதிரிகளின் தளபதிகளின் ஆயுளைக் குறைத்த அர்ஜுனினன் அன்பான நண்பரான ஸ்ரீ கிருஷ்ணரை என் மனம் தியானிக்கட்டும்.' கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் இருவருக்கும் தற்காப்புக் கலையின் குருவாக துரோணாச்சாரியர் இருந்தார். மிகவும் பாரபட்சமற்றவராக இருந்த அவர் தனது மகன் அஸ்வத்தாமாவை விட அர்ஜுனுக்கு இராணுவ அறிவியலைப் பற்றி அதிகம் கற்றுக் கொடுத்தார். இருப்பினும், தன் பராமரிப்பதற்குப் பண ரீதியாக துரியோதனனை சார்ந்திருந்ததால் அவனுக்கு உதவக் கடமைப்பட்டவர் ஆனார். இதனால், துரோணாச்சாரியரும் போரில் இறக்க நேரிட்டது. ஆனாலும், பாண்டவர்கள் எந்த வகையிலும் அவரைக் கொல்ல முடியாமல் வழிகாட்டுதலுக்காக அவரை அணுகியபொழுதும், அவர் அவர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுத்தார் என்பதிலிருந்தே அவரது வீரத்தை மதிப்பிட முடியும்.

கர்ணன் துரியோதனனின் நெருங்கிய நண்பர், அதனால்தான் அவர் கௌரவர்களை ஆதரித்தார் .அவருக்கும் வீர குணங்கள் இருந்தன. அவர் குந்தியின் மூத்த மகன் என்றும் பாண்டவர்கள் உண்மையில் அவரது சகோதரர்கள் என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அவரிடம் தெரிவித்தபொழுது, ​​இந்த ரகசியத்தை யுதிஷ்டிரரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார். ஏனெனில் இந்த ரகசியத்தை அறிந்த பிறகு யுதிஷ்டிரர் போரில் கர்ணனை கொல்வதற்கு முயற்சிக்காமல் போரில் தோல்வி அடைவார் என்பதால் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த ரகசியத்தை யுதிஷ்டிரரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கர்ணன் போரில் துரியோதனனின் பக்கம் இருந்ததால் அவரும் இறக்க நேரிட்டது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
11. விஸ்வரூப தரிசன யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency